சூடானில் இருந்து வெளியேற இலங்கையர்கள் குழு மறுப்பு: சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு குழு சூடானில் தங்க விருப்பம் தெரிவித்ததால், அவர்கள் வேலை இழக்க நேரிடும் என்று வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி வழக்கறிஞர் அலி சப்ரி கூறினார்.
எவ்வாறாயினும், இதுவரை சூடானில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்த 34 இலங்கையர்களை வெளியேற்ற வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவர்களில் 14 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதுடன் மேலும் 6 பேர் சவூதி அரேபியாவின் ஜித்தாவை சென்றடைந்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
மேலும் 14 இலங்கையர்கள் போர்ட் சூடானில் தங்கியுள்ளதாகவும், அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment