நேற்று (09) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் (சிச்சி) வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 400 டொலர்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
முறைப்பாட்டாளரின் கிரெடிட் கார்டில் இருந்து 387 டொலர்கள் அதாவது ஒரு இலட்சத்து ஐயாயிரம் இலங்கை நாணயங்கள் இணையவழி பரிமாற்றத்தின் மூலம் நான்கு தடவைகள் திருடப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்.
117, விஜேராம மாவத்தை, கொழும்பு 07 இல் வசிக்கும் ரோஹித சந்தன ராஜபக்ஷ என்பவரே நாரஹேன்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர் கடந்த 3ஆம் திகதி கோட்டே 184 துவா வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறி மாத்தறையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
Post a Comment