பிரபல மூத்த பாடகர் சனத் நந்தசிறி காலமானார்

Famous Veteran Singer Sanath Nandasiri passed away

மூத்த பாடகரும் இசைக்கலைஞருமான பேராசிரியர் சங்கீத் நிபுன் சனத் நந்தசிறி தனது 81வது வயதில் காலமானார்.


இலங்கை பாடகர்களில் பிரசித்தமான ஒருவரான நந்தசிறி, 60 வருடங்களுக்கும் மேலாக தனது இசையமைப்பிற்காக பல விருதுகளைப் பெற்றுள்ள ஒரு இசையமைப்பாளர் மற்றும் பாடகர்  ஆவார்.


அவர் இலங்கையில் உள்ள காட்சி மற்றும் நிகழ்த்து கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார்.


நந்தசிறி 1955 ஆம் ஆண்டு தனது 13வது வயதில் இருந்து ஊடகத்துறையில் பணியாற்ற தொடக்கி இருந்தார். அஹஸ் கௌவா, துலீகா, சிஹின லோவாக், பெம்பர மது மற்றும் செனசுமா உட்பட 30க்கும் மேற்பட்ட பிரபல சிங்கள திரைப்படங்களின் பின்னணிப் பாடகராகவும் இருந்தார்.


1974 ஆம் ஆண்டில், தனது முதல் தனிக் கச்சேரியான ‘ஸ்வர்ண குண்டலா’ தொடங்கினார், அதன்  பின்னர் சுமார்  250 க்கும் மேற்பட்ட கச்சேரிகள் இவரால் நடாத்தப்பட்டுள்ளன. 1979 இல், அவர் தனது இசை நிகழ்ச்சியின் அதே தலைப்பில் தனது முதல் முழு ஆல்பத்தை பதிவு செய்தார். இதில் அவரது பிரபலமான பாடல்களான "கிசிவாக் நோக்கியனா" மற்றும் "எகொடஹா கண்டே" ஆகியவை அடங்கும்.


அதன் பிறகு அவர் சிங்லங்கா 1980 மற்றும் 1981 இல் மூன்று முக்கிய ஆல்பங்களை பதிவு செய்தார். மேலும், பிரேமசிறி கேமதாசவின் இசை இயக்கத்தில் அவர் திரைப்படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார்.


2016 ஆம் ஆண்டில், மறைந்த மூத்த இசைக்கலைஞர் பண்டித் அமரதேவவின் மறைவைத் தொடர்ந்து, காட்சி மற்றும் நிகழ்த்து கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.


2018 ஆம் ஆண்டு, மேல் மாகாண அழகியல் பல்கலைக்கழக ஓய்வு விடுதி கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சனத் நந்தசிறிக்கு மரியாதை செலுத்தும் வைபவம், ‘நின்னட 2018 துன்பத் ரத ஸ்வர தெஹன’ எனும் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.


இந்நிகழ்வின் போது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நந்தசிறிக்கு விசேட கௌரவ விருதை வழங்கினார்.


2019 ஆம் ஆண்டில், நந்தசிறியின் பாடல்களின் 100 பாடல்கள் மற்றும் "ராசாநந்தயா" என்ற பாடல்களின் தொகுப்பு இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் வெளியிடப்பட்டது.


2019 ஆம் ஆண்டில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அவருக்கு "ஜனாபிமானி" கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


பேராசிரியர் நந்தசிறி அவர்கள் மறையும் போது அவருக்கு வயது 81. அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No Comment
Add Comment
comment url