மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்.

மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்.

வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கு இன்று (17.05.2023) புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இடம்பெற உள்ளது.

  

இதனடிப்படையில் வட மேல் மாகாண ஆளுநராக முன்னால் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன , வடமாக ஆளுநராக தேர்தல் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் P.S.சார்ள்ஸ் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தவிர ஆளுநர் பதவிகளுக்கு மேலும் முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.


வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.


வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கர்ணகொட ஆகியோர் இதற்கு முன்னர் பதவிகளை வகித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No Comment
Add Comment
comment url