இத்தாலியில் வேலை ஒதுக்கீடு குறித்த சிறப்பு அறிவிப்பு
இத்தாலிய வேலை ஒதுக்கீட்டிற்கு இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என இத்தாலியிலுள்ள இலங்கை தூதரகத்தின் தூதுவர் ஜகத் வெள்ளவத்த தெரிவித்துள்ளார்.
இத்தாலியிலுள்ள முதலாளிகள் மற்றும் வணிகங்கள் இலங்கை உட்பட ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுக்கு இத்தாலிய அரசாங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒதுக்கீட்டு முறையின் கீழ் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன்படி இலங்கையர்கள் நேரடியாக அந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என ஜகத் வெள்ளவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கையில் இருந்து இந்த வேலைகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என்றும், இத்தாலியில் உள்ள முதலாளிகளால் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய எந்தவொரு நபருக்கும் இந்த வேலைகளுக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனால் அறிவிக்கப்படுகிறது.