ஜனாதிபதியிடமிருந்து வெளிநாட்டுக் கடன் வழங்குபவர்களுக்கு கடிதம்

 ஜனாதிபதியினால் வெளிநாட்டுக் கடன் வழங்குவோருக்குக் கடிதம் : இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கும் முழு வெளிப்படைத்தன்மையைப் பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வெளிநாட்டு கடன் வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளார்.

பகிரங்க கடிதமொன்றில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இருதரப்பு மற்றும் தனியார் கடனாளிகளுக்கு இடையிலான பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பொதுக் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இலங்கையுடன் சாதகமாக ஈடுபடுமாறு கடனாளிகளை ஜனாதிபதி தனது கடிதத்தில் ஊக்குவித்தார்.

இதேவேளை, இருதரப்பு கடன் வழங்குனர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை எதிர்வரும் 20ஆம் திகதி கூடிய பின்னர், விரும்பிய இலக்கை எட்டுவதற்கான உடன்படிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறுகிறார்.

தெஹியோவிட்ட பிரதேசத்தில் இருதரப்பு கடன் வழங்குவோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No Comment
Add Comment
comment url